KANAVUGAL MEYPADATTUM
Sunday 31 March 2024
Saturday 22 October 2022
Tuesday 16 October 2018
சிவபெருமான் கொடுத்த சுதந்திரம்....
150 வண்ணங்களின் தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்கள்!
பக்தி செய் !
மரியாதைக் குறைவாக பேசுவதோ
வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது
வாழ்க வளமுடன் என்பது எதைக் குறிக்கிறது
வாழ்க என்பது வாழ்த்துச் சொல்.
வளமுடன் என்பது ஒரு நிறைவுத் தன்மையைக் குறிக்கும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் வாழ்த்தினால் நிறைவுத் தன்மையுடன் வாழ்க என்று ஒருவர் வாழ்த்துகிறார் என்று அர்த்தம்.
ஒருவன் எப்போது நிறைவுத் தன்மை அடைய முடியும்?
தேவைகள் பூர்த்தியடையும் போது நிறைவுத் தன்மை ஏற்படும்.
தேவைகளை எப்படி பட்டியலிடுவது.
மனிதனின் பொதுவானத் தேவையை எளிதாக பட்டியலிட்டு விடலாம்.
ஒருவன் மகிழ்ச்சியாக வாழ ஐந்து தேவைகள் முக்கியம்.
1.உடல் நலம்
2.நீளாயுள்
3.நிறைச்செல்வம்
4.உயர்புகழ்
5.மெய்ஞானம்.
இந்த ஐந்தையும் உணர்ந்து அனுபவித்து கடந்து வாழும் வாழ்க்கைதான் முழுமையான வாழ்க்கை.
உலகின் எல்லா இன்பங்களும் இந்த ஐந்தில் அடங்கிவிடும்.
வாழ்க வளமுடன் என்று ஒருவர் உச்சரித்து வாழ்த்தும் போது, நீங்கள் இந்த ஐந்து செல்வங்களையும் பெற்று வாழுங்கள் என்று வாழ்த்துகிறார்.
இது வெறும் வார்த்தை ஜாலமல்ல ! இதுனூடே ஒரு ஆழமான உளவியல் தன்மை ஒளிந்து இருக்கிறது. அடுத்து இதன் பின் ஒரு அறிவியல் தன்மாற்றமும் இருக்கிறது.
அது என்ன ?
வாழ்க வளமுடன் என்று இன்னொரு முறை உச்சரித்து பாருங்கள். உங்களின் உள் நாக்கு அதாவது தொண்டையின் உள் மேல் பகுதியில் “ழ்” எனும்போது ஒரு அழுத்தம் நிகழ்வதை உங்களால் உணர முடியும்.
உள்நாக்கின் உச்சியில் அதாவது நெற்றிக்கும், பின் மண்டையில் பிடறிக் கண்ணுக்கும் நேர் கோட்டில் ஒரு சூட்சுமம் ஒளிந்துள்ளது.
அந்த சூட்சுமம் இந்த பிரபஞ்சத்தோடு நேரடியாக தொடர்புகொண்டிருக்கும் சக்தி.
உங்களின் எண்ணங்களில் எழும் தேவைகளை பிரபஞ்சத்தில் கட்டளையாக மாற்றி அதனை பெற்றுத் தரும் சூட்சுமம் அது.
உங்கள் எண்ணம் வலிமைமிக்கது என்றால், அது உங்கள் மூலமாகவே செயலுக்கு வந்துவிடும். கொஞ்சம் பலகீனமான எண்ணம் என்றாலும் நீங்கள் கவலைப்படத்தேவையில்லை...
நீங்கள் பேரப்பிள்ளைகளை எடுப்பதற்குள்ளாவாவது செயலுக்கு வந்துவிடும். எண்ணம் எப்போது வீணாவது இல்லை.
எண்ணமும் வீணாவது இல்லை. அதனால் எண்ணுவதை வலிமையாக எண்ணுவது சாலச்சிறந்தது.
அந்த சூட்சுமப் பகுதியை அறிவியலில் பீனியல் சுரப்பி என்பார்கள். ஆன்மிகத்தில் துரியம் என்பார்கள்.
வாழ்க வளமுடன் உச்சரிக்கும் போதும் உங்களின் துரியமையம் கட்டளைகள பிரபஞ்சத்திற்கு அனுப்பிக்கொண்டே இருக்கும்.
ஒருவர் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் வளமுடன் வாழ கட்டளைகளை அவர் பிரபஞ்சத்திற்கு அனுப்பிக் கொண்டே இருக்கிறார் என்று அர்த்தம்.
வாழ்க வளமுடன் வெறும் வாழ்த்துச் சொல் அல்ல... அது ஒரு மந்திரச் சொல்.
நன்றி...
கோதுமை யின் தீமைகள்
Negative effects of Wheat !
உயிர் பலி வாங்கும்
கோதுமை யின் தீமைகள்...
அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.
அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டு வந்து விட்டால் அதனால் வாழ முடியாது. உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான்.
ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகி விட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. நம் தேங்காய் ஆபத்து, நம் நிலக் கடலை ஆபத்து, நம் பாரம்பரிய அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவு வகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டி விட்டார்கள்.
அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும். இது தமிழர்களைக் குறி வைத்த வட இந்திய அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்து கொள்ளலாம்.
வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது.
கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.
‘‘இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன். ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது. அதனால், கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.
‘‘நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமை,கோதுமையிலிருந்து தயாராகும் மைதா,ரவை.
நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும். கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம்.
உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட்,
ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது.
கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர். இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன். ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்திய பின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்து விட்டேன்’
என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார்.
‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலி போய் விட்டது. மருந்துகளைநிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர்.
‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன்.
கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’
என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.
இதே போல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர். ‘க்ளூட்டனைத் தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது. ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் பதப்படுத்திய சோள மாவு, அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை. இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.
உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை
பற்றிக் கேட்டோம்...
‘‘கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது. தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் பாரம்பரிய அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம். அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.
கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான்.
வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது.
நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை.
நம்ப வேண்டியதும் இல்லை.
கோதுமையில் இருந்துதான் ரவை,மைதா,சேமியா தயாரிக்கப்படுகிறது என்பதையும் அறியுங்கள்.
நம் தேசத்திலேயே அதிகமாக கோதுமை விளையும் இடம் பஞ்சாப் மாநிலம். நம் தேசத்திலேயே அதகமாக கேன்சர் வரும் மாநிலம் பஞ்சாப். அதிக அளவில் இங்கு கேன்சர் பெருகி வருவதால் கேன்சர் சிகிச்சைக்கு ராஜஸ்தான் செல்ல "கேன்சர் எக்ஸ்பிரஸ் ரயில்" விடப்பட்டு உள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.
தற்போது உலகிலேயே கோதுமை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியாதான் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட நாடுமாகும்.
எங்கெல்லாம் யூரியாவும்,ரசாயன மருந்தும் தெளிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் அலோபதி மருத்துவத்தை போலவே நோய் அதிகரிக்கும்.
நம்ம ஊர் ஐ.ஆர் வகை அரிசி, நயம் பொன்னி அரிசியை விட்டு என்று பாரம்பரிய அரசியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அன்றுதான் உங்கள் வாழ்வு நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக மாறும்.
பாரம்பரிய அரிசி உணவுடன் பாரம்பரிய. காய்கறிகள், பாரம்பரிய பழங்கள் போன்றவற்றையும் ஆறு சுவைகள் உடன் சரி சம விகிதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த நோய் நொடிகளும் நம்மை அண்டவே அண்டாது!.
பாரம்பரிய கோதுமையில் இந்த தாக்கம் இல்லை.
ஆனால் இது பயிரிடப்படுவது இல்லை.
பலருக்கும் பகிருங்கள்.
இயன்ற வரை விலை அதிகமானாலும் சம்பா நாட்டு கோதுமை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகியுங்கள்.
நன்றி
உயிர் பலி வாங்கும்
கோதுமை யின் தீமைகள்...
அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.
அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில் சாப்பிட்டால் அது என்ன மாதிரியான விளைவைத் தரும் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்.
இன்னும் எளிமையாக சொன்னால் ஆற்று நீரில் வாழும் மீன், கடல் நீரில் செத்துப் போய் விடும். கடல் நீரில் வாழும் மீனை ஆற்றில் கொண்டு வந்து விட்டால் அதனால் வாழ முடியாது. உணவின், ஆரோக்கியத்தின் அடிப்படை இந்தத் தத்துவம்தான்.
ஆனால் விளம்பர மாயைகளுக்கும், மோசடியான உணவு அரசியலுக்கும் நாம் பலியாகி விட்டோம் என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு. நம் தேங்காய் ஆபத்து, நம் நிலக் கடலை ஆபத்து, நம் பாரம்பரிய அரிசியால் ஆபத்து என்று இந்திய மண்ணில் விளையும் எல்லா உணவு வகைகளையும் ஆரோக்கியக் கேடு என்று நம்ப வைத்து ஓட்ஸையும், ரீஃபைண்ட் எண்ணெய்களையும் நம் தலையில் கட்டி விட்டார்கள்.
அதே போன்றதொரு மோசடிதான் இந்த சப்பாத்தி மோசடியும். இது தமிழர்களைக் குறி வைத்த வட இந்திய அரசியல் என்று உள்ளூர் லெவலில் புரிந்து கொள்ளலாம்.
வில்லியம் டேவிஸ் என்ற அமெரிக்க இதய நோய் நிபுணர் ஆரோக்கிய விழிப்புணர்வு தரும் எண்ணற்ற புத்தகங்களை எழுதியவர். இவர் எழுதிய ‘Wheat Belly’ என்ற புத்தகம் பரபரப்பாக பேசப்பட்டு, விற்பனையில் புதிய உச்சத்தை சமீபத்தில் எட்டிப் பிடித்திருக்கிறது.
கோதுமை ஒரு விஷம் என்பதுதான் இந்த புத்தகத்தின் சாராம்சம்.
‘‘இதய நோய்களுக்கு ஆஞ்சியோப்ளாஸ்டி அறுவை சிகிச்சைகளை செய்து வருபவன் நான். என்னிடம் சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் படும் துயரங்களைப் பார்த்து மிகுந்த வேதனைப் பட்டிருக்கிறேன். ஆஞ்சியோப்ளாஸ்டி என்பது இதய நோய்க்காக செய்யும் ஒட்டு வேலைதான் என்பதை கொஞ்ச நாளிலேயே உணர்ந்து கொண்டேன். அதனால், இதற்கான மூலகாரணத்தைக் கண்டறிய வேண்டும் என்று முடிவு செய்தேன்.
முக்கியமாக, என்னுடைய அம்மாவே மாரடைப்பால் இறந்தது எனக்கு மிகப் பெரிய துக்கத்தைக் கொடுத்தது. அதனால், கடந்த 15 வருடங்களாக இதய நோய் சம்பந்தமான ஆராய்ச்சியிலேயே முழுவதுமாக என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இத்தனை வருட ஆய்வின் பலனாக உருவானதுதான் நான் எழுதிய ‘Wheat belly’ எனும் புத்தகம்” என்று தன் புத்தகம் பற்றிக் கூறுகிறார் டேவிஸ். ‘நோய்களை உருவாக்குவதில் கோதுமையின் பங்கு முக்கியமானது என்பது தெரிந்து அதிர்ந்து போனேன்’ என்று டேவிஸ் கூறுவதுதான் இதில் ஹைலைட்.
‘‘நம்மில் பெரும்பான்மையோர் இன்று சந்திக்கும் முக்கிய நோய்களான நீரிழிவு, உடல் பருமன் மற்றும் இதய நோய்களுக்கு மூலகாரணமாக இருப்பது நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கோதுமை,கோதுமையிலிருந்து தயாராகும் மைதா,ரவை.
நம் உணவிலிருந்து கோதுமையை நீக்கி விட்டால் நம் வாழ்க்கையே மாறி விடும். கோதுமை, உங்கள் ரத்த சர்க்கரை அளவை ஆச்சர்ப்படும் வகையில் அதிகரிக்கிறது. சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும், உடல் எடை குறைக்கவும் கோதுமை பிரட் சாப்பிடலாம் என நினைக்கிறோம்.
உண்மையில் 2 ஸ்லைஸ் கோதுமை பிரட்,
ஒரு சாக்லேட் பாருக்கு இணையானது.
கோதுமை சாப்பிடாத நோயாளிகளின் உடல் எடையில் ஒரு மாதத்துக்கு உள்ளாகவே மிகப்பெரிய வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது.
என்னிடம் வரும் நீரிழிவு நோயாளிகளில் 80 சதவீதத்தினர் கோதுமை உணவை எடுத்துக் கொள்பவர்களாக இருந்தார்கள். அவர்களை கோதுமையைத் தவிர்க்கச் செய்து சோதித்ததில் 6 மாதங்களுக்குப் பிறகு அவர்களிடத்தில் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக குறைந்ததை உணர்ந்தனர். இதுமட்டுமல்ல, பல நோயாளிகள் தங்கள் கோதுமை அனுபவங்களையும் கூறியது கேட்டு வியந்துபோனேன். ‘கோதுமை சாப்பிடுவதை நிறுத்திய பின் என்னுடைய இன்ஹேலர்களை தூக்கி எறிந்து விட்டேன்’
என்று ஒரு ஆஸ்துமா நோயாளி கூறினார்.
‘15 வருடங்களாக மைக்ரேன் தலைவலிக்காக மருந்துகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். மூன்றே நாட்களில் வலி போய் விட்டது. மருந்துகளைநிறுத்திவிட்டேன்’ என்றார் ஒருவர்.
‘20 வருடங்களாக நெஞ்செரிச்சலால் அவதிப்பட்டேன்.
கோதுமையை நிறுத்திய பிறகு நிம்மதியாகத் தூங்குகிறேன்’
என்பது இன்னொருவரின் வாக்குமூலம்.
இதே போல கோதுமை உணவைத் தவிர்த்ததால் மூட்டு வலி, கொலஸ்ட்ரால் போன்ற நோய்களிலிருந்தும் தாங்கள் விடுபட்டதாக பல நோயாளிகள் என்னுடைய ஆய்வில் சொல்ல ஆரம்பித்தனர். ‘க்ளூட்டனைத் தவிர Gliadin, Amylopectin என உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் பொருட்களும் கோதுமையில் இருக்கிறது. ‘Gluten Free’ என்று அச்சிடப்பட்டு பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களில், அதற்கு பதிலாக சேர்க்கப்படும் பதப்படுத்திய சோள மாவு, அரிசி மாவு மற்றும் உருளைக்கிழங்கு மாவுகள் சர்க்கரை அளவை உயர்த்தக்கூடியவை. இந்தப்பொருட்களும் தவிர்க்கப்பட வேண்டியவையே’’ என்கிறார் வில்லியம் டேவிஸ்.
உணவியல் நிபுணர் லஷ்மியிடம் இந்த கோதுமை சர்ச்சை
பற்றிக் கேட்டோம்...
‘‘கோதுமை பற்றிய பெரிய மாயையை உடைத்திருக்கிறது வில்லியம் டேவிஸின் ஆராய்ச்சி. இதில் யாருக்குப் பலன் இருக்கிறதோ இல்லையோ, தமிழர்களுக்கு நல்ல பாடம் இருக்கிறது. தென்னிந்தியாவின் சீதோஷ்ண நிலைக்கு, நம் மண்ணில் விளையும் பாரம்பரிய அரிசி உணவுகளே ஆரோக்கியமானவை என்பதை இதன் மூலம் அழுத்தமாகப் புரிந்துகொள்ளலாம். அரிசியில் பாலீஷ் செய்யப்பட்ட அரிசி வகைகளைத்தான் நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் தீட்டப்படாத அரிசி உணவே மிகவும் சிறந்தது.
கோதுமையில் இருக்கும் ஒரே நல்ல விஷயம், அதன் நார்ச்சத்து காரணமாக சப்பாத்தியைக் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே நம்மால் சாப்பிட முடியும் என்பதுதான்.
வட இந்தியர்கள் கோதுமையை பிரதான உணவாக எடுத்துக் கொள்கிறார்கள் என்பது அவர்களின் தட்பவெப்ப நிலையையும், மரபணுக்கள் அமைப்பையும் பொறுத்தது.
நாமும் அதைப் பின்பற்ற வேண்டியதில்லை.
நம்ப வேண்டியதும் இல்லை.
கோதுமையில் இருந்துதான் ரவை,மைதா,சேமியா தயாரிக்கப்படுகிறது என்பதையும் அறியுங்கள்.
நம் தேசத்திலேயே அதிகமாக கோதுமை விளையும் இடம் பஞ்சாப் மாநிலம். நம் தேசத்திலேயே அதகமாக கேன்சர் வரும் மாநிலம் பஞ்சாப். அதிக அளவில் இங்கு கேன்சர் பெருகி வருவதால் கேன்சர் சிகிச்சைக்கு ராஜஸ்தான் செல்ல "கேன்சர் எக்ஸ்பிரஸ் ரயில்" விடப்பட்டு உள்ளதை அறிந்து கொள்ளுங்கள்.
தற்போது உலகிலேயே கோதுமை அதிகமாக உற்பத்தி செய்யும் ஆஸ்திரேலியாதான் அதிக கேன்சர் நோயாளிகளை கொண்ட நாடுமாகும்.
எங்கெல்லாம் யூரியாவும்,ரசாயன மருந்தும் தெளிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் அலோபதி மருத்துவத்தை போலவே நோய் அதிகரிக்கும்.
நம்ம ஊர் ஐ.ஆர் வகை அரிசி, நயம் பொன்னி அரிசியை விட்டு என்று பாரம்பரிய அரசியை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களோ அன்றுதான் உங்கள் வாழ்வு நோய் அற்ற வாழ்வே குறைவற்ற செல்வமாக மாறும்.
பாரம்பரிய அரிசி உணவுடன் பாரம்பரிய. காய்கறிகள், பாரம்பரிய பழங்கள் போன்றவற்றையும் ஆறு சுவைகள் உடன் சரி சம விகிதத்தில் எடுத்துக் கொண்டால் எந்த நோய் நொடிகளும் நம்மை அண்டவே அண்டாது!.
பாரம்பரிய கோதுமையில் இந்த தாக்கம் இல்லை.
ஆனால் இது பயிரிடப்படுவது இல்லை.
பலருக்கும் பகிருங்கள்.
இயன்ற வரை விலை அதிகமானாலும் சம்பா நாட்டு கோதுமை வாங்கி மெஷினில் கொடுத்து அரைத்து உபயோகியுங்கள்.
நன்றி
லக்ஷ்மி கடாக்ஷம்
தமிழா விழித்தெழு,,,,,
அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !*??, .
டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள் ,
இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும்
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும்.
இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.
இதனால் பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று ,
இப்படிப்பட்ட
அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..
அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
ஆமாம்...
உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...
இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம் , மன அழுத்தம்
மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து....
இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி
மாரடைப்பு , இருதயக் கோளாறு,
இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம் , தலைசுற்றல் , தலைவலி , மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...
இதற்கு எல்லாம்
முக்கியமான காரணம்....
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது ,
குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.
எப்படி லஞ்சம் பெறுவது ,
கற்றுக் கொள்ளலாம்
அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியதுபோல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
இவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன .
பிறர் தொழிலை எப்படிக் கெடுப்பது
என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.
இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு ....
உங்கள் அருமைக் குழந்தைகளின்
விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...
இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படிப்பட்ட மக்களைச் சீரழிக்கும்
டிவி சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகிறது..
தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்..
நாம் புறக்கணித்தால் தானே
TRP ரேட்டிங் குறைந்தால்
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள் .
நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான் .
எனவே உங்கள்
விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்
குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் .
மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள் .
இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்தான் அவற்றை டிவி பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்கத் தயாராகுங்கள்.....
*அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் , கேளுங்கள்
பேசுங்கள், சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய்
நடக்கும்*
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு........
எண்ணம் போல் வாழ்க்கை
அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள் !*??, .
டிவி நாடகங்களில் வரும் அழுகைகள், குமுறல்கள், ஒப்பாரிகள், உரக்கக் கத்திப் பேசுதல், சோக இசைகள் மற்றும்
சாவு மேளதாளம் இசைகள் ,
இவையெல்லாம்
உங்கள் வீட்டில் இருக்கும்
லக்ஷ்மி கடாக்ஷத்தைச் சீர்குலைத்துக் கெடுத்து விடும்.
இதனால் அபசகுனமான
நிகழ்ச்சிகளின் காட்சிகள் டிவிக்குள் நடந்தாலும் அதன் ஒளி ஒலி அதிர்வுகளின் நிகழ்வுகள் நமது வீட்டிற்குள்ளேயேநடப்பதால்
குடும்பத்தில் பல பிரச்சனைகள் உருவாகும் என்பது அசைக்க முடியாத ஆன்மீக நம்பிக்கையாளர்களின் ஆய்வு ஆகும்.
இதனால் பல நோய்கள் வரலாம்
வீட்டில் பணம் தாங்காமல் போகலாம்,
வீண் செலவுகள் ஏற்படலாம்
தொழில் நஷ்டம் ஏற்படலாம்,
என்று ,
இப்படிப்பட்ட
அதிர்ச்சி தரும் ஆன்மீக ஆய்வு முடிவுகள் ஒரு பக்கம் எச்சரிக்கை செய்கிறது..
அதே சமயம் ஆன்மீக நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் அதிர்ச்சி தரும் மருத்துவ ஆராய்ச்சி ஆய்வு முடிவுகள் மிகவும் அபாயகரமானதாக உள்ளது.
ஆமாம்...
உங்கள் உடல் நலத்தையும் சீரழித்துவிடும்
அதிர்ச்சி ரிப்போர்ட்...
இதனால் கண் பார்வை கோளாறில் ஆரம்பித்து மன இறுக்கம் , மன அழுத்தம்
மன நோய் வந்து... உடல் எடை அதிகரித்து....
இதன் தொடர்ச்சியாக...
சர்க்கரை வியாதி
மாரடைப்பு , இருதயக் கோளாறு,
இரத்த அழுத்தம், கழுத்து எலும்புத் தேய்மானம் , தலைசுற்றல் , தலைவலி , மூளை மற்றும் நரம்பியல் சம்பந்தமான பிரச்சனைகள் வரும்...
இதற்கு எல்லாம்
முக்கியமான காரணம்....
பிறரை எப்படிக் கெடுப்பது, அழிப்பது, துன்புறுத்துவது ,
குடும்பத்தினருக்குள்
மாமியார் மருமகள் சண்டை,
அண்ணன் தம்பி சண்டை
சந்தேகப்படுவது,
சகுனி வேலை பார்ப்பது,
எல்லாம் கற்றுக் கொள்ளலாம்.
எப்படி லஞ்சம் பெறுவது ,
கற்றுக் கொள்ளலாம்
அதோடு
நேர்மையான அரசு அதிகாரிகளை
எப்படி லஞ்சம் வாங்கியதுபோல்
திட்டமிட்டு மாட்டி விடுவது
இவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன .
பிறர் தொழிலை எப்படிக் கெடுப்பது
என்பது எல்லாம் காண்பிக்கப்பட்டு
மக்களுக்கு பழக்குவிக்கப்படுகிறது.
இவையெல்லாம் விட
பெரிய பேரிழப்பு ....
உங்கள் அருமைக் குழந்தைகளின்
விலை மதிப்பற்ற எதிர்காலம் பாழாக்கப்படுகிறது...
இத்தனை பாதிப்புகள் தெரிந்ததும்
தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்கள் TRP ரேட்டிங் அதிகரித்திட
சுய லாபத்துக்காக இப்படிப்பட்ட மக்களைச் சீரழிக்கும்
டிவி சீரியல்கள் தயாரிக்க முக்கியத்துவம் தருகிறது..
தயவுசெய்து மக்களே,
இது போன்ற கேவலமான நாடகங்களைப் புறக்கணியுங்கள்..
நாம் புறக்கணித்தால் தானே
TRP ரேட்டிங் குறைந்தால்
தொலைக்காட்சி நிறுவனங்கள் மக்களை சீரழிக்கும் சீரியல்களை தானே நிறுத்தி விடுவார்கள் .
நமது செயல் மட்டும் இல்லை எண்ணங்களும் நமது கர்மா தான் .
எனவே உங்கள்
விலைமதிப்பில்லா ஓய்வு நேரத்தை
அன்பான குழந்தைகள் மற்றும் வீட்டில் உள்ள கணவன், மனைவி, பெரியவர்களோடும் சிரித்து பேசி பாசத்துடன் பழகி வாழ்க்கையை அனுபவியுங்கள்
குறைந்த நேரம் நல்ல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள் .
மற்ற நேரங்களில்
நல்ல புத்தகங்களைப் படியுங்கள்.. .
கிடைக்க கூடிய பொன்னான நேரங்களில் பிறருக்கு நன்மை செய்யும் நல்ல காரியங்களிலும் ஈடுபடுங்கள் .
இல்லையேல் வரும் பலன்களை
நல்லதோ கெட்டதோ
நீங்கள்தான் அவற்றை டிவி பார்த்து
உருவாக்கினீர்கள் என்பதை உணர்ந்து
அனுபவிக்கத் தயாராகுங்கள்.....
*அல்லதை விடுத்து நண்பர்களே
நல்லதை பாருங்கள் , கேளுங்கள்
பேசுங்கள், சிந்தியுங்கள்
வாழ்வில் எல்லாம் நல்லதாய்
நடக்கும்*
வாழ்க வளமுடன்
வாழ்க நலமுடன்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நம்மை சுற்றி நடப்பனவற்றுக்கு
நாமே பொறுப்பு........
எண்ணம் போல் வாழ்க்கை
நீரிழிவை கட்டுப்படுத்தும் திரிபலா !
திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றையும் குறிப்பதாகும். இம்மூன்றும் இணைந்து தரப்படும் மருந்து.
திரிபலா ஆறு சுவைகளையும் கொண்ட அற்புதமான மருந்து.
ஆங்கில மருந்துகள் நிறைய உட்கொள்பவர்கள், இம்மருந்த்தினை காலை, இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.
மேலும்,
1. இரைப்பை பலவீனத்தை சரிசெய்து, உணவிலிருந்து சுத்தமான அன்னரசத்தை பிரிக்க உதவுகிறது. (EXTRACTS)
2. ரத்ததை தேவையான அளவு உற்பத்தி செய்யவும், இரத்தக் கழிவுகளை வெளியேற்றவும், ரத்தத்தில் கலந்த பித்தத்தையும் வெளியேற்றிட
உதவுகிறது.
3. இதன் துவர்ப்புத் தன்மையால் அதிஉஷ்ணம் தணிந்து உள்ரணம் ஆற்றப்படுகிறது.
4. நரம்பு மண்டலம், எலும்பு மண்டலம், கழிவு மண்டலம் அனைத்தையுமே சீர்ப்படுத்துகிறது.
மொத்தத்தில் உடம்பைப் பேணிப் பாதுகாக்கும் தன்மை திரிபலாவிற்கு உண்டு. திரிபலா சேர்க்காத சித்த மருந்தே இல்லை எனலாம்.
நீரிழிவைக் கட்டுப்படுத்தவும் உடல் தேய்வினைத் தடுக்கவும் திரிபலா ஒரு நன்மருந்து.
Subscribe to:
Posts (Atom)